Published : 11 Feb 2021 06:18 PM
Last Updated : 11 Feb 2021 06:18 PM
எங்களது கரோனா தடுப்பு மருந்து முழுமையாக சரியானதா என்றால் இல்லை, ஆனால் எங்கள் மருந்து சிறந்த பலனை அளிக்கிறது என்று அஸ்ட்ராஜென்கா கரோனா தடுப்பு மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கரோனா தடுப்பு மருந்தை செலுத்தும் பணியை தென் ஆப்பிரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் பரவும் புதியவகை உருமாற்றம் அடைந்த கரோன வைரஸுக்கு அஸ்ட்ராஜென்கா கரோனா தடுப்பு செயல்படாத காரணத்தால் அதனை பயன்படுத்துவதை நிறுத்த போவதாக தென் ஆப்பிரிக்க அரசு தெரிவித்தது.
இந்த நிலையில் தொடர்ந்து விமர்சனங்கள் எழ பிரிட்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் அஸ்ட்ராஜென்கா கரோனா தடுப்பு மருந்து சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அஸ்ட்ராஜென்கா கரோனா தடுப்பு மருந்தின் நிறுவனத்தின் தலைவர் பாஸ்கல் சொரியட் கூறும்போது, “ இது முழுமையாக சரியானதா என்றால் இல்லை. ஆனால் எங்கள் கரோனா தடுப்பு மருந்து சிறந்த பலனை அளிக்கிறது.
பிப்ரவரியில் 100 மில்லியன் டோஸை வேறு யார் உற்பத்தி செய்கிறார்கள். நாங்கள் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றுகிறோம். இதன் காரணமாகவே நாங்கள் தினமும் பணிக்கு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT