Published : 08 Feb 2021 12:46 PM
Last Updated : 08 Feb 2021 12:46 PM

பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 19,715 பேருக்கு கரோனா பாதிப்பு

பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 19,715 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்த் பிரான்ஸ் சுகாதார அமைச்சகம் தரப்பில், “ பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 33 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை பிரான்ஸில் கரோனாவுக்கு 78 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸில் கடந்த சில நாட்களாக கரோனா பரவல் அதிகரித்து வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகிலேயே கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பிரான்ஸும் உள்ளது.

பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது.

இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x