Published : 04 Feb 2021 03:13 AM
Last Updated : 04 Feb 2021 03:13 AM
கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கன்டெய்னர் முனையத் திட்டம் அமைக்கும் இந்தியாவுடனான ஒப்பந்தத்தை இலங்கை ரத்து செய்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கன்டெய்னர் முனையம் அமைக்க இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் கடந்த 2019-ம் ஆண்டு இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதற்கான ஏற்பாடுகளை இந்தியா, ஜப்பான் நாடுகள் செய்து வந்தன.
இந்நிலையில் திடீரென இந்தஒப்பந்தத்தை இலங்கை ரத்துசெய்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் உள்ள 23 தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக இந்த ஒப்பந்தத்தை இலங்கை ரத்து செய்துள்ளதாகத்தெரிகிறது. துறைமுக கன்டெய்னர் முனையம் அமைக்கும் திட்டத்தை வெளிநாடுகளுக்குக் கொடுக்கக்கூடாது என தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பைத்தெரிவித்ததால் அதிபர் கோத்தபயராஜபட்ச இந்த முடிவை எடுத்துள்ளார். கடந்த மாதம் 28-ம் தேதிஇதற்கான அறிவிப்பு வெளியாகிஉள்ளது.
அதேநேரம் கொழும்பு துறைமுகத்தை அடுத்துள்ள ஒரு பகுதியில் ஓர் சர்வதேச கன்டெய்னர்முனையத்தை சீன நிறுவனம்நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் துறைமுகத்தின் மேற்குப் பகுதியில் கன்டெய்னர் முனையம் அமைக்கலாம் எனஇந்தியா, ஜப்பானுக்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT