Published : 29 Jan 2021 11:49 AM
Last Updated : 29 Jan 2021 11:49 AM

கரோனா தடுப்பு மருந்தை போட்டுக் கொண்ட ஐ. நா. பொதுச் செயலாளர்

கரோனா தடுப்பு மருந்தை போட்டுக் கொண்டது மகிழ்ச்சி அளித்துள்ளதாக ஐ. நா., பொதுச் செயலாளர் ஆண்டோனியா குத்தரேஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஐ, நா. பொதுச் செயலாளர் அண்டோனியா குத்தரெஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ கரோனா தடுப்பு மருந்தை பெற்று கொண்டதை நினைத்து நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். தடுப்பு மருந்து அனைவருக்கும் கிடைக்குறதா என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

கரோனாவினால் அதிகம் பாதிப்பு ஏற்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 2.6 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் இதுவரை 1 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன.

இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தெற்கு இங்கிலாந்தில் உள்ள கென்ட் மாகாணத்தில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ், ஏற்கெனவே இருந்த கரோனா வைரஸ் பரவும் வேகத்தைவிட 70 சதவீதம் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என அறியப்பட்டது.

இதையடுத்து, பிரிட்டன் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளில் நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது . மேலும், பிரிட்டனுக்கு 40க்கும் மேற்பட்ட நாடுகள் விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளன.

கரோனா பரவல் ஒருபுறம் இருக்க, பல நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x