Published : 29 Jan 2021 07:07 AM
Last Updated : 29 Jan 2021 07:07 AM

ஐ.நா.வில் நிரந்தர உறுப்பினர்: இந்தியாவுக்கு பைடன் ஆதரவு

வாஷிங்டன்

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் டபிள்யூ புஷ், பராக் ஒபாமா, டொனால்டு ட்ரம்ப் ஆகியோரும் இதே கருத்தை வலியுறுத்தியிருந்தனர்.

தற்போது பைடனும் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகள் சபையின் தூதர் லிண்டா தாமஸ் கிரீன் பீல்டிடம் அதிபர்பைடன் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்தியாவுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடு அந்தஸ்து வாங்கித் தரப்படும் என பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x