Published : 24 Jan 2021 11:33 AM
Last Updated : 24 Jan 2021 11:33 AM

ஆப்பிரிக்காவில் கரோனா தொற்று 30 லட்சத்தை கடந்தது

ஆப்பிரிக்காவில் 30 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஆப்பிரிக்க நோய் தடுப்பு மையம் தரப்பில், “ ஆப்பிரிக்காவில் இதுவரை 30 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். ஆப்பிரிக்க கண்டத்தில் தென் ஆப்பிரிக்கவில்தான் அதிகபடியான கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவை தொடர்ந்து துனியா, மொராக்கோ, எத்தியோப்பியா நாடுகளிலும் கரோனா தொற்று அதிகம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 9.8 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

கரோனா ஊரடங்கால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன.

பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். பல நாடுகளில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x