Published : 19 Jan 2021 03:55 PM
Last Updated : 19 Jan 2021 03:55 PM

இந்திய அணிக்கு சுந்தர் பிச்சை வாழ்த்து

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பிரிஸ்பேனில் lநடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைபற்றிய இந்திய அணிக்கு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்த கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தொடரை 2-வது முறையாக வென்றது.

இந்திய அணி பெற்ற வரலாற்று வெற்றிக்கு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். கடந்த 69 ஆண்டுகளுக்குப்பின் பிரிஸ்பேன் மைதானத்தில் மிக்பெரிய ஸ்கோரை சேஸிங் செய்து இந்திய அணி வென்றுள்ளது.

இந்திய அணியின் வரலாற்று வெற்றிகு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றன. அந்தவகையில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இந்திய அணிக்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில், “என்ன ஒரு தொடர். சிறந்த தொடர்களில் ஒன்று. வாழ்த்துகள் இந்தியா. ஆஸ்திரேலியா நீங்களும் சிறப்பாக விளையாடினீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x