Published : 18 Jan 2021 10:47 AM
Last Updated : 18 Jan 2021 10:47 AM
இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 12, 545 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தாலியில் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 12,545 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,69,832 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 475 பேர் உயிரிழக்க அங்கு பலியானவர்கள் எண்ணிக்கை 16, 310 ஆக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியின் பல மாகாணங்களில் கரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருப்பதைத் தொடர்ந்து அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு மருத்துவ நிபுணர்கள் குழு அறிவுறுத்தியுள்ளது.
இத்தாலியில் இவ்வாண்டின் தொடக்கத்தில் கரோனா பரவல் தீவிரமாக இருந்தது. இதனால் அங்கு ஊரடங்கு பரந்த அளவில் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாகப் பொருளாதாரம் சரிந்தது. எனவே, இம்முறை நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 9 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் வெற்றி பெற்று தற்போது பல நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT