Published : 13 Oct 2015 10:03 AM
Last Updated : 13 Oct 2015 10:03 AM
நேபாளத்தின் 38-வது பிரதமராக கே.பி. சர்மா ஒளி நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
நேபாளத்தில் புதிய அரசியல் சாசனம் அண்மையில் அமல்படுத் தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய வம்சாவளி யினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதில் ஒருமித்த கருத்தை எட்ட முடியாததால் பிரதமர் சுஷில் கொய்ராலா அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து நேபாள நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் புதிய பிரதமரை தேர்ந் தெடுக்க வாக்கெடுப்பு நடத்தப் பட்டது. இதில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.பி. சர்மா ஒளிக்கும் நேபாள காங்கிரஸ் வேட்பாளர் சுஷில் கொய்ராவுக்கும் இடையே போட்டி நிலவியது.
மொத்தம் 587 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் 338 பேர் ஆதரவுடன் சர்மா ஒளி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுஷில் கொய்ராவுக்கு 249 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
இதைத் தொடர்ந்து காத்மாண்டுவில் நேற்று நடைபெற்ற விழாவில் நேபாளத் தின் 38-வது பிரதமராக கே.பி. சர்மா ஒளி பதவியேற்றுக் கொண் டார். அவருக்கு ஆளுநர் ராம் பரம் யாதவ் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
பிரதமரோடு இரண்டு துணைப் பிரதமர்கள் ஐந்து அமைச் சர்களும் விழாவில் பதவியேற்றுக் கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT