Published : 16 Jan 2021 12:16 PM
Last Updated : 16 Jan 2021 12:16 PM

கரோனா பலி: 20 லட்சத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கரோனாவினால் பலியானவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கூறும்போது, “உலகம் முழுவதும் கரோனாவினால் 20 லட்சத்துக்கும் அதிகாமானவர்கள் பலியாகி உள்ளனர். கடந்த மூன்று மாதத்தில் மட்டும் கரோனாவுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

ஒரு நாளைக்கு 11,000க்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் 9 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது.

உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையில் வெற்றி பெற்று பல நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

இந்த நிலையில் பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கரோனா பரவத் தொடங்கியுள்ளது. பிற ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் இது எதிரொலித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x