Published : 13 Jan 2021 11:14 AM
Last Updated : 13 Jan 2021 11:14 AM

அமெரிக்காவில் கரோனாவுக்கு ஒரே நாளில் 4,500 பேர் பலி

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 4,500 பேர்வரை பலியாகி இருப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவைத் தலைமையிடமாககக் கொண்டு செயல்படும் மருத்துவ் பல்கலைகழகம் கூறும்போது, “ அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,500 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 2,35,000 ஆக உள்ளது. தற்போது, 1,31,000 பேர் மருத்துமனையில் சிகிச்சையில் உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கலிபோர்னியா, புளோரிடா மாகாணங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா தடுப்பு மருந்துகளை மக்களிடம் கொண்டு செல்லும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 9 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன.

பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அங்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x