Published : 12 Jan 2021 03:13 AM
Last Updated : 12 Jan 2021 03:13 AM

லடாக் பகுதியில் எல்லை தாண்டி இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன வீரர் திரும்ப ஒப்படைப்பு

எல்லை தாண்டி இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன ராணுவ வீரரை அந்நாட்டிடம் இந்திய ராணுவத்தினர் திரும்ப ஒப்படைத்தனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் லடாக்கின் கிழக்கு பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்ததால் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் 35 பேர் இறந்ததாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து எல்லையில் பதற்றம் நிலவியது. இருதரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. படைகளை விலக்கிக் கொள்ள பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. எனினும் இன்னும் முட்டுக்கட்டை நீடிக்கிறது.

இந்நிலையில், கடந்த 8-ம் தேதி எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாங்காங் சோ ஏரிக்கரைக்கு தெற்கே இந்திய எல்லைக்குள் சீன ராணுவ வீரர் ஒருவர் அத்துமீறி நுழைந்தார். அவரை அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய வீரர்கள் பிடித்து வைத்து விசாரணை நடத்தினர். அந்த வீரர் வழி தவறி இந்திய எல்லைக்குள் வந்ததாக கூறப்பட்டது.

இதையடுத்து, அவரை சீனாவிடம் ஒப்படைக்கும் பணிகள் நடந்தன. அதன்படி, நேற்று காலை சீன வீரரை அந்நாட்டு அதிகாரிகளிடம் சுஷூல் மோல்டோ பகுதியில் இந்திய ராணுவத்தினர் ஒப்படைத்தனர். ஏற்கெனவே உள்ள நடைமுறை விதிகளின்படி சீனாவிடம் அந்நாட்டு ராணுவ வீரர் ஒப்படைக்கப்பட்டதாகவும் இந்திய எல்லைக்குள் சீன வீரர் நுழைந்ததற்கான சூழ்நிலைகள் பற்றி விசாரிக்கப்பட்டு வருவதாகவும் இந்தியராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 19-ம்தேதி லடாக்கில் டெம்சோக் செக்டார் பகுதியில் எல்லைப் பகுதியில் சுற்றித் திரிந்த சீனராணுவ வீரர், இந்திய வீரர்களிடம் பிடிபட்டார். பின்னர், அவர்இதேபோல திரும்ப ஒப்படைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x