Published : 10 Jan 2021 04:14 PM
Last Updated : 10 Jan 2021 04:14 PM

சீனாவின் கரோனா தடுப்பு மருந்துக்கு ஜோடார்ன் அனுமதி

சீனாவின் சினோபார்ம் கரோனா தடுப்பு மருந்துக்கு ஜோர்டான் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து ஜோர்டானின் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் நிர்வாகம் தரப்பில், “அவசர நிலையைக் கருத்தில் கொண்டு சீனாவின் சினோபார்ம் கரோனா தடுப்பு மருந்தை வாங்க அனுமதி வழங்கப்படுகிறது. பைசர் கரோனா தடுப்பு மருந்துக்குப் பிறகு நாங்கள் அனுமதிக்கும் இரண்டாவது கரோனா தடுப்பு மருந்து இதுவாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோர்டானில் கரோனா பரவலில் இரண்டாம் கட்ட நிலை தொடர்வதால் அங்கு கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சீனாவின் தேசிய மருத்துவ நிறுவனமான சினோபார்ம் தயாரிக்கும் கரோனா தடுப்பு மருந்துகள் பல்வேறு கட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின் தற்போது பயன்பாட்டுக்குத் தயாராகியுள்ளன. சவுதி அரேபியா, இந்தோனேசியா, துருக்கி, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் சீனாவின் கரோனா தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

உருமாறிய கரோனா வைரஸ்

பிரிட்டனில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. புதிய வகை கரோனா வைரஸ், கட்டுப்பாட்டை மீறி இருப்பதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பிரிட்டன் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் சவுதி அரேபியா, துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஹாங்காங் உட்பட 40க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டன் உடனான சர்வதேச விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளன.

இந்த நிலையில் உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக இடைவெளியை மக்கள் கவனமாகப் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஸ்புட்னிக், மாடர்னா, பைசர், சினோபார்ம் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x