Published : 10 Jan 2021 03:32 PM
Last Updated : 10 Jan 2021 03:32 PM

பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 5 லட்சத்தைக் கடந்தது

பாகிஸ்தானில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பாதிப்பு 5 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதார அமைப்பு கூறும்போது, “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,899 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,02,416 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 9 நாட்களில் மட்டும் 20,000 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. சிந்து, பஞ்சாப், இஸ்லாமாபாத் ஆகிய பகுதிகளில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், பொதுக் கூட்டங்கள், பேரணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல நகரங்களில் கரோனா கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன. மேலும், பொதுமக்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் கரோனா இரண்டாம் கட்ட அலை தொடங்க உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், பாகிஸ்தானில் இரண்டாவது ஊரடங்கை அமல்படுத்த முடியாது. எனினும் கரோனா வைரஸ் பரவாமல் இருக்க அனைத்துக் கட்டுப்பாடுகளையும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கரோனாவுக்கு 8.5 கோடி பேர் பாதிப்பட்டுள்ளனர். 18 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் பைசர், மாடர்னா, ஸ்புட்னிக் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் கரோனா வைரஸுக்கு எதிராகப் பயனளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x