Published : 10 Jan 2021 10:55 AM
Last Updated : 10 Jan 2021 10:55 AM
அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் கரோனா தடுப்பு மருந்துகளில் நம்பகத்தன்மை இல்லை என்று கூறிய அயத்துல்லா அலி காமெனியின் பதிவுகளை ட்விட்டர் நீக்கியுள்ளது.
ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி தனது ட்விட்டர் பக்கத்தில், “ அமெரிக்காவிலோ அல்லது இங்கிலாந்திலோ தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் முற்றிலும் நம்பத்தகாதவர்கள். பிரான்ஸ் உடனான எங்களது தடுப்பு மருந்து அனுபவமும் சிறப்பானதாக இல்லை” என்று தெரிவித்தார்.
மேலும், நாங்கள் எங்கு நம்பகத்தன்மை கொண்டிருக்கிறோமா அங்கு கரோனா தடுப்பு மருந்துகளை வாங்குவோம் என்று குறிப்பிட்டார்.
ட்விட்டரின் விதிகளுக்குப் புறம்பானதாக இருப்பதாக ட்விட்டர் நிர்வாகம் இக்கருத்துகளை நீக்கியுள்ளது.
ஈரானில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தும் பரிசோதனையை அந்நாட்டு அரசு கடந்த வாரம் தொடங்கியது.
ஈரானில் சமீப நாட்களாகவே கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு பழைய கட்டுப்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளன. பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜிம், உணவகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானும், சவுதியும் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரான், கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மத்தியக் கிழக்கு நாடாக உள்ளது.
இந்த நிலையில் பிற நாடுகளிலிருந்து கரோனா தடுப்பு மருந்து எங்களது முயற்சியை அமெரிக்கா தடுப்பதாக ஈரான் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT