Published : 10 Jan 2021 09:46 AM
Last Updated : 10 Jan 2021 09:46 AM

நியூசிலாந்தில் புதிதாக 33 பேருக்கு கரோனா

நியூசிலாந்தில் கரோனா தொற்று இல்லாத நிலையில் கடந்த மூன்று நாட்களாக புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தபட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நியூசிலாந்து சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில் கூறப்படுவதாவது:

“ நியூசிலாந்தில் கடந்த மூன்று நாட்களாக புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உள நாட்டில் எவருக்கும் கரோனா தொற்று கண்டுப்பிடிக்கப்படவில்லை. வெளி நாட்டிலிருந்து வந்தவர்களுக்குத்தான் கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் கண்டறிப்பட்ட உருமாறிய கரோனா வைரஸ்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று கண்டறியப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நியூசிலாந்தில் இதுவரை 1,863 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். . இவர்களில் தற்போது 75 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரிட்டனில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. புதிய வகை கரோனா வைரஸ், கட்டுப்பாட்டை மீறி இருப்பதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பிரிட்டன் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

சவுதி அரேபியா, துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஹாங்காங் உட்பட 40க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டன் உடனான சர்வதேச விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளன. இந்த நிலையில் உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x