Last Updated : 20 Oct, 2015 10:44 AM

 

Published : 20 Oct 2015 10:44 AM
Last Updated : 20 Oct 2015 10:44 AM

உள்நாட்டு போரால் சிரியா அழிந்துவிடக் கூடாது: அமெரிக்கா கவலை

உள்நாட்டு போரால் சிரியா அழிந்து போவதை விரும்பவில்லை என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் உட்பட பல்வேறு கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே மிக நீண்ட காலமாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஐ.எஸ். தீவிர வாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப் படைகள் வான்வழி தாக்கு தல் நடத்தி வருகின்றன. அதே நேரம் அதிபர் ஆசாத்தை எதிர்த் தும் மிதவாத கிளர்ச்சியாளர்களை அமெரிக்கா ஆதரித்து வருகிறது.

இந்நிலையில் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய ராணுவம் கடந்த ஒரு மாதமாக வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் சிரியாவில் உள்நாட்டுப் போர் உச்ச கட்டத்தை எட்டி யுள்ளது.

இதனிடையே சிரியா விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

உள்நாட்டு போரால் சிரியா வின் பெரும் பகுதி பேரழிவுகளை சந்தித்துள்ளது. அந்த நாடு முழு வதும் அழிவதை அமெரிக்கா விரும்பவில்லை. தற்போது சிரியா வில் ரஷ்ய விமானப் படை தாக்கு தல் நடத்தி வருவது மிக மோச மான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அஞ்சுகிறோம்.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண ரஷ்யா, சவுதி அரேபியா, துருக்கி நாடுகளுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x