Published : 07 Jan 2021 04:15 PM
Last Updated : 07 Jan 2021 04:15 PM

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வன்முறை: வைரலாகும் புகைப்படங்கள்

படங்கள் உதவி: ட்விட்டர்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறையின்போது எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடந்தது. இதனால் நாடாளுமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அப்போது அமெரிக்க நாடாளுமன்றம் நோக்கி அதிபர் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தனர். அவர்களை நாடாளுமன்றத்துக்குள் நுழைய விடாமல் போலீஸார் தடுத்தபோது, போலீஸாருக்கும், ட்ரம்ப்பின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் கூட்டத்தைக் கலைக்கும் வகையில் போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தினரைக் கலைத்தனர். இந்த வன்முறையில் 4 பேர் பலியாகினர்.

வன்முறையாளர்கள் பல்வேறு அலுவலங்களில் நுழைந்து அங்கிருந்த ஆவணங்கள் மற்றும் நாற்காலிகளை வீசி எறிந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அவற்றின் தொகுப்பு:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x