Published : 06 Jan 2021 09:06 PM
Last Updated : 06 Jan 2021 09:06 PM

பிரிட்டனில் ஒரே நாளில் 60,916 பேருக்குக் கரோனா பாதிப்பு

பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 60,916 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து பிரிட்டன் அரசு வெளியிட்ட அறிக்கையில், “பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 60,916 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த 28 நாட்களில் 800க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதியவகை கரோனா வைரஸ் பரவி வருவதைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் தெற்கு இங்கிலாந்தில் உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அந்நாட்டில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டில் மீண்டும் ஊரடங்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய வகை கரோனா வைரஸ் ஏற்கெனவே இருக்கும் கரோனா வைரஸைவிட 70 சதவீதம் வேகமாகப் பரவும் வேகம் கொண்டதாக இருக்கிறது என பிரிட்டன் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரிட்டனுக்கான விமானச் சேவையை 40க்கும் மேற்பட்ட நாடுகள் தடை செய்துள்ளன.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 8.5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x