Published : 05 Jan 2021 06:22 PM
Last Updated : 05 Jan 2021 06:22 PM
ஜப்பானில் இதுவரை இல்லாத அளவு அதிகபட்சமாக ஒரே நாளில் 4,670 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனியார் செய்தி ஊடகம் வெளியிட்ட தகவலில், “ஜப்பானில் கடந்த 24 மணி நேரத்தில் 4,670 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டோக்கியோவில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
ஜப்பானில் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது
கரோனா பரவலைத் தடுக்க ஜப்பான் பிரதமர் சுகா, அமைச்சர்களுடன் சில நாட்களுக்கு முன்னர் ஆலோசனையில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து தலைநகர் டோக்கியோவில் சனிக்கிழமை முதல் அவசர நிலை பிரகனடப்படுத்தப்பட்டது.
கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதார பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.
பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் மீண்டும் பல நாடுகளில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 8.5 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT