Published : 05 Jan 2021 03:54 PM
Last Updated : 05 Jan 2021 03:54 PM
ஸ்காட்லாந்தில் கரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அங்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிரிட்டன் பிரதமர் மோரிஸ் ஜான்சன் இங்கிலாந்தில் கரோனா பரவல் தீவிரவாத இருப்பதால் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று என்று தெரிவித்தார்.
இதனையடுத்து பிரிட்டன் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இதனால் அந்நாட்டில் மக்கள் நடமாடத்திற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பிரிட்டனின் ஒரு அங்கமான ஸ்காட்லாந்தில் ஜனவரி முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் கூறும்போது, “ இங்கிலாந்தின் தெற்கில் பகுதியில் கரோனா தொற்று விகிதங்களைப் பார்ப்பதன் மூலம் ஸ்காட்லாந்தில் என்ன நடக்கக்கூடும் என்பதை நாம் அறியலாம். எனவே அதைத் தடுக்க, நாம் உடனடியாகவும் உறுதியாகவும் செயல்பட வேண்டும். எனவே ஊரடங்கை இம்மாதம் முழுவதும் நீட்டிக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதார பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.
பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் மீண்டும் பல நாடுகளில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 8.5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT