Published : 04 Jan 2021 10:15 PM
Last Updated : 04 Jan 2021 10:15 PM

சீனாவின் ஆய்வகத்திலிருந்துதான் கரோனா பரவியது: அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு சீனா மீண்டும் மறுப்பு

சீனாவின் வூஹான் மாகாணத்தின் ஆய்வுக் கூடத்திலிருந்து கரோனா பரவியுள்ளது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.

கரோனா சீனாவின் ஆய்வகத்திலிருந்துதான் பரவியுள்ளது என்று அமெரிக்கா தொட்ரந்து கூறி வருகிறது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் 10 பேர் அடங்கிய விஞ்ஞான குழு இம்மாதம் சீனாவுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “ வூஹானின் ஆய்வகத்திலிருந்து கரோனா பரவவில்லை. உலகின் பல இடங்களில் கரோனா வெடிப்பு நிகழ்ந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலக சுகாதார துறையின் மருத்துவ குழு வருகை குறித்து சீனா இதுவரை ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 8 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x