Published : 04 Jan 2021 10:00 PM
Last Updated : 04 Jan 2021 10:00 PM

இந்தோனேசியாவில் அடுத்த வாரம் கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடக்கம்

அடுத்த வாரம் கரோனா தடுப்பு மருந்து பொது மக்களுக்கு செலுத்தப்படும் என்று இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்தோனேசிய சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “ அடுத்த வாரம் பெரிய அளவிலான கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி நடைபெற உள்ளது. 3 கோடிக்கும் அதிகமானோர் கரோனா தடுப்பு மருந்துகள் இதற்காக சேர்க்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைசர் கரோனா தடுப்பு மருந்து மற்றும் சீனாவின் கரோனா தடுப்பு மருந்துகளை இந்தோனேசியா செலுத்த உள்ளது.

நாட்டின் 34 மாகாணங்களிலும் கரோனா பரவி உள்ளது. கரோனா பாதிப்பைக் குறைக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கிழக்கு ஆசியாவில் தற்போது கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக இந்தோனேசியா அறியப்படுகிறது.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளன.

அமெரிக்கா, ரஷ்யா, சவூதி ஆகிய நாடுகளும் கரோனா தடுப்பு மருந்தை மக்களுக்குச் செலுத்தும் பணியைத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கரோனா பரவத் தொடங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x