Published : 02 Jan 2021 07:50 PM
Last Updated : 02 Jan 2021 07:50 PM
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கரோனா பரவல் மூன்றாம் கட்டத்தை அடைந்துள்ளதைத் தொடர்ந்து அங்கு அவசர நிலை பிரகனடப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து டோக்கியோ மாகாண ஆளுநர் யுரிகோ கூறும்போது, “ டோக்கியோவில் கடந்த சில நாட்களாக கரோனா அதிகரித்து வருகிறது. டோக்கியோவில் அவசர நிலையைப் பிரகனப்படுத்துமாறு ஜப்பானின் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும் டோக்கியோவை சுற்றியுள்ள மூன்று மாகாணங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது அவசியமாகிறது. உணவு விடுதிகள் மற்றும் சந்தைகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், கரோனா பரவலைத் தடுக்க ஜப்பான் பிரதமர் சுகா, அமைச்சர்களுடன் சில நாட்களுக்கு முன்னர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 8 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதார பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.
பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் மீண்டும் பல நாடுகளில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT