Published : 01 Jan 2021 09:38 PM
Last Updated : 01 Jan 2021 09:38 PM

சுலைமானியைக் கொன்றவர்கள் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள்: ஈரான் எச்சரிக்கை

ஈரானின் புரட்சி படைத் தளபதி காசிம் சுலைமானியை கொலை செய்தவர்கள் உலகில் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள் என்று அந்நாடு எச்சரித்துள்ளது.

காசிம் சுலைமானி அமெரிக்கப் படையால் கொல்லப்பட்ட ஒருவருடம் கடந்த நிலையில் அவருக்கு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் பல ஈரான் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து ஈரான் தலைமை நீதிபதி இம்ராஹிம் ரைசி கூறும்போது, “சுலைமானியை கொலை செய்தவர்கள் உலகில் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள். அவர்கள் பெரும் பழிவாங்களுக்கு சாட்சியாக இருக்கப் போகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 3-ம் தேதி பாக்தாத்தில் ஈரானின் குவாட்ஸ் படையின் தளபதி குவாசிம் சுலைமானி, துணைத் தளபதி அபு மெஹதி முஹென்திஸ் உள்ளிட்ட ராணுவ வீரர்களை அமெரிக்காவின் ஆள் இல்லா ராணுவ விமானம் மூலம் குண்டுவீசி தாக்கியது. இதில் சுலைமானி உள்ளிட்ட முக்கிய ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டார்கள்.

இந்த விவகாரத்தில் பழிக்குப் பழி வாங்குவோம் என்று முழக்கமிட்ட ஈரான் அரசு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை தீவிரவாதியாக அறிவித்தது.

மேலும், பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் ஈரான் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இதில் கொல்லப்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் ஈரான் தளபதி சுலைமானி உள்ளிட்ட ராணுவத்தினரைக் கொலை செய்ததில் 40 அமெரிக்க அதிகாரிகளுக்குப் பங்கு உண்டு என்பதை ஈரான் ராணுவம் கண்டறிந்துள்ளது.

இதையடுத்து, அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட 40 பேரைக் கைது செய்ய ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பி ஈரான் நாட்டு நீதிமன்றம் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x