Published : 01 Jan 2021 09:05 PM
Last Updated : 01 Jan 2021 09:05 PM

தென் கொரியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கரோனா

தென் கொரியாவில் மீண்டும் கரோனா அதிகரித்து வருகிறது. அங்கு அண்மையில் 1000-க்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தென்கொரிய சுகாதாரத் துறை தரப்பில், “ தென்கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,029 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட்து.

இதில் 1,004 பேருக்கு உள்ளூரிலேயே கரோனா ஏற்பட்டுள்ளது. இதுவரை 61,769 பேர் கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 917 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஏப்ரல் மாதத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கமாகக் குறைந்தது. அதன் பிறகு சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகள் மே மாதத்தில் தளர்த்தப்பட்டன. இந்நிலையில் மக்கள் புழக்கம் அதிகரித்ததும் தென்கொரியாவில் இரண்டாம் கட்டப் பரவல் ஏற்பட்டது.

இரண்டாம் கட்டப் பரவல் குளிர்காலத்தில் ஏற்படும் என்று ஏற்கெனவே கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், தென்கொரியாவில் அதற்கு முன்னரே தொடங்கியது.

இந்த நிலையில் கரோனா தடுப்பு மருந்தின் முடிவுகள் பிற நாடுகளில் எவ்வாறு உள்ளது என்பதைச் சார்ந்து தென்கொரியாவில் தடுப்பூசியைச் செலுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 8 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x