Published : 31 Dec 2020 10:03 PM
Last Updated : 31 Dec 2020 10:03 PM
டோக்கியோவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 1000 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து டோக்கியோ ஆளுநர் யூரிகோ கோய்கே கூறும்போது, “ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 1,000 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 1,000க்கும் அதிகமாகவும் இருக்கலாம் என்பதால் பாதிப்பு குறித்து துல்லியமான புள்ளிவிவரங்களைத் தொகுத்து வருகிறோம். கரோனா பரவல் காரணமாக புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை. நாம் கரோனா பரவலைத் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
டோக்கியாவில்தான் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், கரோனா பரவலைத் தடுக்க ஜப்பான் பிரதமர் சுகா, அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 8 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதார பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.
பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் மீண்டும் பல நாடுகளில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT