Published : 31 Dec 2020 06:58 PM
Last Updated : 31 Dec 2020 06:58 PM

அமெரிக்காவில் ஒரே நாளில் கரோனாவுக்கு 3,927 பேர் பலி

அமெரிக்காவில் ஒரே நாளில் 3,927 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் கூறும்போது, “அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,927 பேர் கரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். சமீபத்தில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும்.

அமெரிக்காவில் இதுவரை கரோனாவுக்கு 3,41,845 பேர் பலியாகி உள்ளனர். 1,97,15,899 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

வரும் நாட்களில் கரோனா பாதிப்பு அமெரிக்காவில் அதிகரிக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தடுப்பு மருந்தை மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியில் தீவிரமாக இருக்க வேண்டும். அதிகமான மருத்துவப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும் என்று ஜோ பைடன் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

ஃபெடெக்ஸ் மற்றும் யுபிஎஸ் நிறுவனங்கள் மூலம், நாட்டிலுள்ள ஒவ்வொரு மாகாணத்துக்கும் கரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பும் முயற்சியை அமெரிக்கா தொடங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி நியூயார்க் நகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய செவிலியருக்கு முதன்முதலாகக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.

மேலும், மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக அமெரிக்கத் தலைவர்கள் பலரும் கரோனா தடுப்பு மருந்தைப் பெற்று வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x