Published : 30 Dec 2020 07:30 PM
Last Updated : 30 Dec 2020 07:30 PM
கலிபோர்னியாவில் செவிலியர் ஒருவருக்குக் கடந்த வாரம் பைசர் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. இந்நிலையில், அவருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏபிசி வெளியிட்ட செய்தியில், “கலிபோர்னியாவைச் சேர்ந்த 45 வயதான செவிலியர் ஒருவருக்குக் கடந்த வாரம் பைசர் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. இந்த நிலையில் அவருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு அறிகுறிகள் ஏதும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு எதிர்பாராத ஒன்று என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தடுப்பு மருந்தை மக்களிடம் சென்றடையும் முயற்சியில் தீவிரமாக இருக்க வேண்டும். அதிகமான மருத்துவப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும் என்று ஜோ பைடன் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
ஃபெடெக்ஸ் மற்றும் யுபிஎஸ் நிறுவனங்கள் மூலம், நாட்டிலுள்ள ஒவ்வொரு மாகாணத்துக்கும் கரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பும் முயற்சியை அமெரிக்கா தொடங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி நியூயார்க் நகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய செவிலியருக்கு முதன்முதலாகக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.
மேலும், மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக அமெரிக்கத் தலைவர்கள் பலரும் கரோனா தடுப்பு மருந்தைப் பெற்று வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT