Published : 30 Dec 2020 01:46 PM
Last Updated : 30 Dec 2020 01:46 PM

சிங்கப்பூரில் தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடக்கம்

சிங்கப்பூரில் முதன்முதலாக சுகாதாரப் பணியாளர்களுக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “சிங்கப்பூரில் முதன்முதலாக பைசர் கரோனா தடுப்பு மருந்தைச் சுகாதாரப் பணியாளர்களுக்குச் செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தடுப்பு மருந்து பொதுமக்களுக்குச் செலுத்தப்பட உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரா லிம் என்ற செவிலியருக்கு முதன்முதலாக பைசர் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆசியாவிலேயே பைசர் கரோனா தடுப்பு மருந்து முதன்முதலாக சிங்கப்பூரில்தான் செலுத்தப்பட்டுள்ளது.

பிரிட்டனில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. புதிய வகை கரோனா வைரஸ், கட்டுப்பாட்டை மீறி இருப்பதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பிரிட்டன் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

சவுதி அரேபியா, துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஹாங்காங் உட்பட 40க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டன் உடனான சர்வதேச விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளன.

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 8 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x