Published : 28 Dec 2020 02:25 PM
Last Updated : 28 Dec 2020 02:25 PM

ஜெர்மனியில் 101 வயது மூதாட்டிக்கு முதல் தடுப்பூசி

ஜெர்மனியில் 101 வயது மூதாட்டிக்கு முதன்முதலாக கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.

ஜெர்மனியில் பைசர் கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணமான சாக்ஸானி அன்ஹால்டியைச் சேர்ந்த 101 வயது மூதாட்டிக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கரோனா பரவலின் தீவிரம் அதிகமாக உள்ளதால் அதனைக் கட்டுப்படுத்த ஜெர்மனி அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 8 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா வைரஸால் உலக நாடுகளை மீண்டும் பீதி தொற்றிக் கொண்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x