முதலில் தீவிரவாதத்தை கைவிடுங்கள்: பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

முதலில் தீவிரவாதத்தை கைவிடுங்கள்: பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
Updated on
1 min read

பாகிஸ்தான் அரசு முதலில் தீவிர வாதத்தை கைவிட வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார். இப்பிரச்சினைக்கு தீர்வு காண 4 யோசனைகளை அவர் முன்வைத்தார்.

இதுதொடர்பாக ஐ.நா. பொது சபை கூட்டத்தில் நேற்றுமுன்தினம் பேசிய சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்தார். அவர் பேசியதாவது:

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண 4 அம்ச திட்டங்கள் தேவை யில்லை. ஒரு அம்ச திட்டம் இருந் தால் மட்டும் போதும். பாகிஸ்தான் அரசு முதலில் தீவிரவாத நட வடிக்கைகளை கைவிட வேண்டும்.

இந்தியாவுக்கு எதிராக தீவிர வாதம் மூலம் மறைமுகப் போரை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தின் குருதாஸ் பூர் மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் உதம்பூர் ஆகிய பகுதிகளில் பாகிஸ் தான் தீவிரவாதிகள் அண்மையில் தாக்குதல் நடத்தினர். சர்வதேச சமூகம் எச்சரித்தும் பாகிஸ்தான் திருந்தவில்லை.

அண்மையில் பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவிய 2 தீவிரவாதிகள் உயிருடன் பிடிபட்டனர். இதேபோல இன்னும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

ஐ.நா. சபை தோல்வி

சுமார் மூன்று கண்டங்களில் உள் நாட்டுப் போர் நடைபெற்று வரு கிறது. சிரியா, இராக், லிபியா உள் ளிட்ட நாடுகளின் நிலைமை மோச மாக உள்ளது. அங்கு அமைதியை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

உலகளாவிய அளவில் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அலட் சியமாக செயல்படுகிறது. இதற்கு ஒரே தீர்வு. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும். அப்போதுதான் உலக நாடுகளில் அமைதியைப் பேணிக் காக்க முடியும். ஐ.நா. சபையின் முடி வெடுக்கும் அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்.

1945-ம் ஆண்டு நடை முறையிலேயே ஐ.நா. சபை செயல் பட்டு வருகிறது. அப்போது உரு வாக்கப்பட்ட பாதுகாப்பு கவுன்சில் 2015-ம் ஆண்டுக்கு எவ்வாறு பொருந்தும்? ஆப்பிரிக்க கண்டம் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடு களுக்கு பாதுகாப்பு கவுன்சிலில் ஓர் உறுப்பினர்கூட இல்லை. இது எந்த வகையில் நியாயம்?

ஐ.நா. அமைதிப் படையின் நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. இந்தியத் தரப்பில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் வீரர்கள் அமைதிப் படையில் பணியாற்றி வருகின்றனர். 161 இந்திய வீரர்கள் பணியின்போது உயிர்நீத்துள்ளனர்.

இவ்வாறு சுஷ்மா ஸ்வராஜ் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in