Published : 24 Dec 2020 04:53 PM
Last Updated : 24 Dec 2020 04:53 PM
புதியவகை கரோனா தொற்று காரணமாக பிரிட்டனுக்கு விமான போக்குவரத்தை தற்காலிகமாக சீனா ரத்து செய்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியூறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “ உருமாறிய கரோனா வைரஸுன் தன்மை மற்றும் அதன் பாதிப்பை கருத்தில் கொண்டு சீனா -- பிரிட்டனுக்கும் இடையேயான விமான போக்குவரத்தை ரத்து செய்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் எல்லை தொடர்ந்து கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு கடைப்பிடித்து வருகிறது.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6.5 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.
இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதுவும் பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனாவால் உலக நாடுகளை மீண்டும் பீதி தொற்றிக் கொண்டுள்ளது.
இதன் காரணமாக 40க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டனுடனான விமான சேவைக்கு தடை விதித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT