Published : 24 Dec 2020 11:57 AM
Last Updated : 24 Dec 2020 11:57 AM
உருமாற்றம் கொண்ட கரோனா வைரஸுக்கு மாடர்னா கரோனா தடுப்பு மருந்து பயனளிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாடர்னா மருத்துவ நிறுவனம் தரப்பில், “ பிரிட்டனில் பரவி வரும் உருமாற்றம் கொண்ட கரோனா வைரஸுக்கு மாடர்னா கரோனா தடுப்பு மருந்து பயனுள்ளதாக உள்ளது. பிரிட்டனில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இது பயனளித்துள்ளது. நாங்கள் தொடர்ந்து மாடர்னா தடுப்பு மருந்து எந்த அளவிற்கு செயல்படுகிறது என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் பரவி வரும் உருமாற்றம் கொண்ட கரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. புதிய வகை வைரஸ் கட்டுப்பாட்டை மீறி இருப்பதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் சவுதி அரேபியா, துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஹாங்காங் உட்பட 40க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டன் உடனான சர்வதேச விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளன.
இந்த நிலையில் பிரிட்டனில் கரோனா மருத்துவ பரிசோதனைகளை தீவிரப்படுத்தி உள்ளது அரசு. சமூக இடைவெளியை மக்கள் கவனமாக பின்பற்ற வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT