Published : 09 Oct 2015 06:47 PM
Last Updated : 09 Oct 2015 06:47 PM
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வரும் 22ம் தேதி வாஷிங்டன் செல்கிறார். அப்போது பாகிஸ்தானுடன் அமெரிக்கா சிவில் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ள அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், அணு ஆயுதங்களை வேகமாக குவித்து வருவது, பொருளாதார முன்னேற்ற தோல்வி, தீவிரவாத அச்சுறுத்தல்களின் தாயகமாக உருவாகி வருவது உள்ளிட்ட பல காரணங்களால் பாகிஸ்தான் கிட்டத்தட்ட உலகிற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக அமெரிக்க புலனாய்வு நிறுவனமான சிஐஏ-வில் இருந்து ஓய்வுபெற்ற முன்னாள் அதிகாரி கெவின் ஹல்பெர்ட் கூறியுள்ளார்.
கெவின் ஹல்பெர்ட் அமெரிக்க புலனாய்வு நிறுவனமான சிஐஏவில் இருந்து கடந்த ஜூன் 2014-ல் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
இதுதொடர்பாக அவர் 'தி சிப்ஹெர் பிரீப்'- என்ற இணையதளத்தின் தலையங்க பகுதியில் கூறியிருப்பதாவது:
அமெரி்க்காவுடன் சிவில் அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறினால் இந்த உலகிற்கே அச்சுறுத்தலாக பாகிஸ்தான் மாறிவிடும். பாகிஸ்தானில் தற்போது நிலவி வரும் சூழ்நிலைகள் நாட்டை தவறான பாதையில் கொண்டு செல்கிறது. பல ஆண்டுகளாக இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த ஜிகாதி குழுக்களை பயன்படுத்தி வருவதை பாகிஸ்தான் நியாயப்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் மக்கள் தொகையில் பெரும்பாலோனோர் தலிபான் உள்ளிட்ட தீவிரவாத குழுக்களை தீய சக்திகளாகவே பார்ப்பதில்லை.
அல்கொய்தாவுக்கு எதிராக போராடுவதை ஏதோ அமெரிக்காவுடன் சண்டை போடுவதை போல பெரிதுப்படுத்தி வருகிறது பாகிஸ்தான். அதிகரித்து வரும் பயங்கரவாதத்தை வேரறுப்பதில் பாகிஸ்தானுக்கு விருப்பமில்லை. இதனால் பாகிஸ்தானிலேயே உள்நாட்டு பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. லஸ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-ஜாங்வி, பாகிஸ்தான் தலிபான், ஆப்கன் தலிபான் உள்ளிட்ட பல தீவிரவாத குழுக்கள் பாகிஸ்தானில் தற்போது ஆட்சியில் உள்ள அரசை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இவ்வாறு கெவின் ஹல்பெர்ட் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT