Published : 23 Dec 2020 06:03 PM
Last Updated : 23 Dec 2020 06:03 PM

ஸ்விட்சர்லாந்தில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடக்கம்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்விட்சர்லாந்தில் கரோனா தடுப்பு மருந்து இன்று முதல் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து லுசெர்னி மாகாண சுகாதாரத் துறை தலைவர் கைடோ கிராஃப் கூறும்போது, “ நாங்கள் பைசர் கரோனா தடுப்பு மருந்தை செலுத்தத் தொடங்கியுள்ளோம். கரோனா தடுப்பு மருந்து மக்களிடம் சென்றடைவது மிக முக்கியமானது. அப்போதுதான் கரோனா பரவல் குறையும்” என்று தெரிவித்தார்.

கடந்த இரு மாதங்களாக ஸ்விட்சர்லாந்து மருத்துவக் குழு நடத்திய ஆய்வில் பைசர் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பாக இருப்பதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், நல்ல பலனையும் தருகிறது என்றும் தெரிக்கப்பட்டது.

இந்நிலையில், அங்கு கரோனா தடுப்பு மருந்து இன்று முதல் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளன.

அமெரிக்கா, ரஷ்யா, சவூதி ஆகிய நாடுகளும் கரோனா தடுப்பு மருந்தை மக்களுக்குச் செலுத்தும் பணியைத் தொடங்கியுள்ளன.

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 6.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x