Published : 23 Dec 2020 05:38 PM
Last Updated : 23 Dec 2020 05:38 PM

இந்தோனேசியாவில் கரோனா பலி 20,000-ஐ கடந்தது

இந்தோனேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,514 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 151 பேர் பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து இந்தோனேசிய சுகாதாரத் துறை தரப்பில், “ இந்தோனேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,514 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 151 பேர் பலியாகி உள்ளனர். இந்தோனேசியாவில் இதுவரை கரோனா 6, 85,639 பேருக்கு கரோனா உறுதிப்பட்டது. மேலும் கரோனா பலி எண்ணிக்கை 20, 408 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 34 மாகாணங்களிலும் கரோனா பரவி உள்ளது. கரோனா பாதிப்பைக் குறைக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கிழக்கு ஆசியாவில் தற்போது கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக இந்தோனேசியா அறியப்படுகிறது.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளன.

அமெரிக்கா, ரஷ்யா, சவுதி ஆகிய நாடுகளும் கரோனா தடுப்பு மருந்தை மக்களுக்குச் செலுத்தும் பணியைத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கரோனா பரவத் தொடங்கியுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 6.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x