Published : 22 Dec 2020 01:01 PM
Last Updated : 22 Dec 2020 01:01 PM

தென்கொரியாவில் கரோனா தொற்று 51,460 ஆக அதிகரிப்பு

தென் கொரியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,460 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தென்கொரிய சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், ''தென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 800க்கும் அதிகமானவர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு எண்ணிக்கை 51,460 ஆக அதிகரித்துள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே தென் கொரியாவில் 1,000க்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சியோலில் மட்டும் 300க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, ஏப்ரல் மாதத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கமாகக் குறைந்தது. அதன் பிறகு சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகள் மே மாதத்தில் தளர்த்தப்பட்டன. இந்நிலையில் மக்கள் புழக்கம் அதிகரித்ததும் தென்கொரியாவில் இரண்டாம் கட்டப் பரவல் ஏற்பட்டது.

இரண்டாம் கட்டப் பரவல் குளிர்காலத்தில் ஏற்படும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், தென்கொரியாவில் அதற்கு முன்னரே தொடங்கியது. இந்த நிலையில் கரோனா தடுப்பு மருந்தின் முடிவுகள் பிற நாடுகளில் எவ்வாறு உள்ளது என்பதைச் சார்ந்து தென்கொரியாவில் தடுப்பூசியைச் செலுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 6.5 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x