Published : 21 Dec 2020 10:18 PM
Last Updated : 21 Dec 2020 10:18 PM

இங்கிலாந்தில் 24 மணி நேரத்தில் 35,928 பேர் கரோனாவால் பாதிப்பு

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 35 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து இங்கிலாந்து சுகாதாரத் துறை தரப்பில், “ இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 35,928 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. 300க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

பிரிட்டனின் தெற்கு இங்கிலாந்தில் கரோனா வைரஸில் புதிய வகை வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து அந்நாட்டில் மீண்டும் லாக்டவுன் கொண்டுவரப்பட்டுள்ளது. பல்வேறு ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்தியுள்ளன.

நிலைமை கட்டுக்கடங்காமல் செல்லும் ஆபத்து இருப்பதால், உடனடியாக அவசரக் கூட்டத்துக்கு பிரிட்டன் அரசு ஏற்பாடு செய்துள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பல்வேறு தளர்வுகளை பிரிட்டன் அரசு அறிவித்திருந்த நிலையில், புதியவகை கரோனா வைரஸ் பரவலையடுத்து, அந்தத் தளர்வுகளை ரத்து செய்துள்ளது.

இதற்கு முன்புவரை 3-வது படிநிலை கட்டுப்பாடுகளுடன் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு முதல் 4-வது படிநிலை லாக்டவுனைக் கடுமையாக அமல்படுத்தியுள்ளார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x