Published : 21 Dec 2020 03:08 PM
Last Updated : 21 Dec 2020 03:08 PM
பிரிட்டனில் புதியவகை கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கு விமான போக்குவரத்தை ஹாங்காங் தடை செய்துள்ளது.
இதுகுறித்து ஹாங்காங் சுகாதாரத் துறை செயலாளர் சோபியா கூறும்போது, “ இன்று நள்ளிரவிலிருந்து பிரிட்டனிலிருந்து எந்த விமானமும் ஹாங்காங்குக்கு வந்தடையாது. மேலும் கடந்த 14 நாட்களில் பிரிட்டனிலிருந்து ஹாங்காங் வந்த அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2 வாரத்தில் ஹாங்காங்குக்கு வந்த சர்வதேச பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் ஹாங்காங் அரசும் தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் பரவி வரும் புதிய கரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. புதிய வைரஸ் கட்டுப்பாட்டை மீறி இருப்பதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் சவுதி அரேபியாவும், துருக்கி , ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளும் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளன.
இந்த நிலையில் புதியவகை கரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கையில் பிரிட்டன் பிரதமர் மோரிஸ் ஜான்சன் ஈடுபட்டுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவிலிருந்து பரவிய கரோனா வைரஸுக்கு தற்போது தடுப்பு மருந்துகள் கண்டுப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த புதியவகை கரோனா பரவல் உலக நாடுகளிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT