Published : 18 Dec 2020 03:53 PM
Last Updated : 18 Dec 2020 03:53 PM
மாடர்னா கரோனா தடுப்பு மருந்தை உபயோகத்திற்கு பயன்படுத்தலாம் என்று அமெரிக்க உணவு மற்றும் கட்டுப்பாட்டு துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க மருத்துவத் துறை கூறும்போது, “ மாடர்னா நிறுவனம் உற்பத்தி செய்திருக்கும் கரோனா தடுப்பு மருந்தை உபயோகத்திற்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக சில நாட்களுக்கு முன்னர்தான் பைசர் நிறுவனத்தின் கரோனா தடுப்புமருந்துக்கு அமெரிக்காவில் அனுமதி அளிக்கப்பட்டது.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் கரோனா அதிகரித்து வருவதால் அங்கு மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவில் பைஸர் கரோனா தடுப்பு மருந்து அடுத்த 24 மணி நேரத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும். ஃபெடெக்ஸ் மற்றும் யுபிஎஸ் நிறுவனங்கள் மூலம், நாட்டிலுள்ள ஒவ்வொரு மாகாணத்துக்கும் கரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பும் முயற்சியைத் தொடங்கியுள்ளோம் என்று அதிபர் ட்ரம்ப் கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி நியூயார்க் நகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய செவிலியருக்கு முதன்முதலாகக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT