Published : 18 Dec 2020 01:00 PM
Last Updated : 18 Dec 2020 01:00 PM

பிரேசிலில் கரோனாவுக்கு ஒரே நாளில் 1,000க்கும் அதிகமானவர்கள் பலி

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,000க்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை தரப்பில், “ பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,092 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரேசிலில் கரோனாவினால் பலியானவர்கள் எண்ணிக்கை 1,85,000 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் பிரேசிலில் கரோனாவுக்கு 70,000 பேர் கரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பிரேசிலில் 70லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் பிரேசில் உள்ளது.

பிரேசிலின் முக்கிய நகரங்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனைகளில் படுக்கைகள் விரைவில் நிரம்பலாம் என்று தனியார் மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன.

பிரேசிலில் பிப்ரவரி மாதம் முதல் கரோனா தொற்றுப் பரவத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன.

தென் அமெரிக்க நாடுகளில் பிரேசிலும், அர்ஜென்டினாவும் கரோனா வைரஸ் பரவலால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன என்றும், தென் அமெரிக்காவின் கரோனா மையமாக பிரேசில் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு முன்னரே தெரிவித்திருந்தது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x