Published : 17 Dec 2020 12:38 PM
Last Updated : 17 Dec 2020 12:38 PM

வருட இறுதிக்குள் 10 லட்சத்துக்கு அதிகமான கரோனா தடுப்பு மருந்துகள் வந்து சேரும்: பிரான்ஸ்

இவ்வருட இறுதிக்குள் 10 லட்சத்துக்கும் அதிகமான கரோனா தடுப்பு மருந்துகள் பிரான்ஸுக்கு வந்து சேரும் என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் பிரதமர் ஜின் கேஸ்டெக்ஸ் கூறும்போது, “ பிரான்ஸுக்கு இவ்வருட இறுதியில் 10 லட்சத்துக்கும் அதிகமான கரோனா தடுப்பு மருந்துகள் வந்து சேரும். அடுத்த இரண்டு மாதத்துக்குள் 20 லட்சத்துக்கும் அதிகமான மருந்துகள் வந்து சேர உள்ளன. கரோனா தடுப்பு மருந்துகள் வயதில் மூத்தவர்களுக்கும், அதிகநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு முதலில் செலுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கு அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலக்கட்டத்தில் 4,000 என்ற அளவில் பிரான்ஸில் கரோனா தொற்று ஏற்பட்டது. சமீப நாட்களாக கரோனா தொற்று அதிகம் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் மக்ரோன் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அதிகாரிகளுடன் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பிரான்ஸில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் உணவு விடுதிகள் திறக்கப்படும் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x