ஜெர்மனி நகர மேயரான இந்தியர்

ஜெர்மனி நகர மேயரான இந்தியர்
Updated on
1 min read

ஜெர்மனி நகர மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அசோக் தரன் (49) பதவியேற்றுக் கொண்டார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனி பிளவுபட்டது. அதன்படி மேற்கு ஜெர்மனியின் தலைநகராக பான், கிழக்கு ஜெர்மனியின் தலைநகராக பெர்லின் விளங்கின. 45 ஆண்டுகளுக்குப் பிறகு 1990-ல் கிழக்கு, மேற்கு ஜெர்மனி நாடுகள் ஒன்றாக இணைந்தன.

இதில் பான் நகர மேயர் தேர்தல் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி நடைபெற்றது. இதில் தற்போதைய பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் கிறிஸ்டியன் டெமா கரடிக் யூனியன்-சி.டி.யு. கட்சியைச் சேர்ந்த அசோக் தரன் 50.06 சதவீத வாக்குகளைப் அமோக வெற்றி பெற்றார். பான் நகரில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற விழாவில் அவர் அதிகாரப்பூர்வ மாக மேயராக பதவியேற்றுக் கொண்டார். அவர் ஐந்து ஆண்டுகள் பதவியில் நீடிப்பார்.

அசோக் தரன் கோனிங்ஸ் வின்டர் நகர துணை மேயராகவும் கருவூலத் துறை தலைவராகவும் பணியாற்றி உள்ளார். இந்திய தந்தைக்கும் ஜெர்மனி தாய்க்கும் பிறந்த அவர் ஜெர்மனியின் முதல் இந்திய வம்சாவளி மேயர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in