Published : 15 Dec 2020 01:49 PM
Last Updated : 15 Dec 2020 01:49 PM

அமெரிக்காவில் கரோனா பலி 3 லட்சத்தைக் கடந்தது

பிரதிநிதித்துவப் படம்.

அமெரிக்காவில் கரோனா தடுப்பு மருந்து திங்கட்கிழமை முதல் பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டு வரும் நிலையில், அங்கு கரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸுக்கு 1,621 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து நாட்டில் கரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 3,08,091 ஆக அதிகரித்துள்ளது. நியூயார்க் மற்றும் கலிபோர்னியாவில் கரோனா பலி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவில் நேற்று மட்டும் 1,98,805 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,69,42,980 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவில் செவிலியர் ஓருவருக்கு முதன்முதலாகக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.

அமெரிக்காவில் பைஸர் கரோனா தடுப்பு மருந்து அடுத்த 24 மணி நேரத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும். ஃபெடெக்ஸ் மற்றும் யுபிஎஸ் நிறுவனங்கள் மூலம், நாட்டிலுள்ள ஒவ்வொரு மாகாணத்துக்கும் கரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பும் முயற்சியைத் தொடங்கியுள்ளோம் என்று அதிபர் ட்ரம்ப் கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி நியூயார்க் நகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய செவிலியருக்கு முதன்முதலாகக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x