Published : 10 Dec 2020 06:44 PM
Last Updated : 10 Dec 2020 06:44 PM

ஸ்பெயினில் கரோனா பாதிப்பு குறைந்தது

ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு கரோனா வைரஸ் பாதிப்பு ஸ்பெயினில் குறைந்துள்ளது.

இதுகுறித்து ஸ்பெயின் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 9,773 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. இது வரவேற்கத்தக்கது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டதன் விளைவாகத்தான் கரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினில் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளன.

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 6.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x