Published : 10 Dec 2020 04:15 PM
Last Updated : 10 Dec 2020 04:15 PM

டோக்கியோவில் ஒரே நாளில் 600 பேர் கரோனாவால் பாதிப்பு

டோக்கியாவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 600 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜப்பான் சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “டோக்கியோவில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகபட்சமாக 600 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,68,573 ஆக அதிகரித்துள்ளது. ஜப்பானில் இதுவரை 2,465 பேர் கரோனா வைரஸ் பாதிப்பால் பலியாகி உள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் கரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருவதால் அங்கு மருத்துவமனைகள் விரைவில் நிரம்பலாம் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6.5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் இறுதிக்கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளன.

ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.

பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.இந்த நிலையில் மீண்டும் பல நாடுகளில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x