Published : 08 Dec 2020 12:06 PM
Last Updated : 08 Dec 2020 12:06 PM

கரோனா: அமெரிக்காவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான உணவக விடுதிகள் மூடல்

கரோனா வைரஸ் காரணமாக அமெரிக்கா முழுவதும் 1,10,000 உணவக விடுதிகள் மூடப்பட்டு இருப்பதாக தேசிய உணவக சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க தேசிய உணவக சங்கம் தரப்பில், “அமெரிக்காவில் சுமார் 16 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த சுமார் 1,10,000 உணவக விடுதிகள் கரோனா காரணமாக மூடப்பட்டுள்ளன. 48% உணவக விடுதிகள் மட்டுமே தற்போது இயங்குகின்றன. கரோனா தடுப்பு நடவடிக்கைகளைச் சரியாகக் கையாளாததன் காரணமாக இது நிகழ்ந்துள்ளது. சிறு வணிக நிறுவனங்களும் கரோனா காரணமாக மூடும் நிலையை எட்டியுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபநாட்களாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்துக்குப் பிறகு அமெரிக்காவில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் கரோனா வைரஸ் 2-வது கட்ட அலை பரவியது போன்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாள்தோறும் ஏறக்குறைய ஒரு லட்சத்துக்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முதல் பணியாக புதிய மருத்துவ வல்லுநர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் மக்களுக்கு உறுதியளித்துள்ளார். மேலும் பொதுமக்கள் முகக்கவசத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x