Published : 07 Dec 2020 07:59 PM
Last Updated : 07 Dec 2020 07:59 PM
தெற்கு கலிபோர்னியாவில் கரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் தரப்பில், “தெற்கு கலிபோர்னியாவில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் சேர்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் மாகாண அரசு அங்கு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் மக்கள் கூடுவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக கரோனாவுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. உருவாக்கப்படும் மருந்துகள் பலகட்டப் பரிசோதனைகளுக்கு அனுப்பப்படும்போது எதிர்பாராத பலனை அளிக்காமல் போவதும், அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதுமாகவே இருந்து வந்தன.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னா நிறுவனம், பைசர் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த பையோ எண்டெக், ரஷ்யாவின் ஸ்புட்னிக் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டப் பரிசோதனையில் வெற்றி பெற்று தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
மேலும் உலகின் முதல் நாடாக, பைசர் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியைப் பயன்படுத்த பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கரோனா தடுப்பு மருந்து குறித்து வரும் தகவல்கள் தனித்துவமாக உள்ளன. ஆரம்பக் கட்டத்தில் கரோனா தடுப்பு மருந்துக்குத் தட்டுப்பாடுகள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யாருக்கு முதலில் கிடைக்க வேண்டும் என்று உலக நாடுகள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT