Published : 07 Dec 2020 05:18 PM
Last Updated : 07 Dec 2020 05:18 PM

பாகிஸ்தானில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 3,795 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,795 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 2,013 பேரும், பஞ்சாப்பில் 807 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூலை மாதத்துக்குப் பிறகு நாட்டில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிந்து மாகாணத்தில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்துள்ளதால் கட்டுப்பாடுகள் அங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், பொதுக் கூட்டங்கள், பேரணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பல நகரங்களில் கரோனா கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன. மேலும், பொதுமக்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் கரோனா இரண்டாம் கட்ட அலை தொடங்க உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், பாகிஸ்தானில் இரண்டாவது ஊரடங்கை அமல்படுத்த முடியாது. எனினும், கரோனா வைரஸ் பரவாமல் இருக்க அனைத்துக் கட்டுப்பாடுகளையும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாகிஸ்தானில் இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x